புதன், 28 மார்ச், 2018

அண்ணே அண்ணே (1)

அண்ணே அண்ணே (1)
‍‍‍============================================ருத்ரா

"சொடக்கு மேலே..."

"ஏண்டா! சினிமாப்பாட்டெல்லாம் தூள் பறக்குது..."

"அட! போங்கண்ணே.."

"ஏண்டா சலிச்சுக்கிறே?"

"எங்கே...இதுக்குமேலே சொடக்கு போட்டு பாரு..என்ன நடக்கும் தெரியும்ல.. கடப்பாரைய வச்சு நெம்பினாலும் ஒண்ணும் இங்கே கவிழாது.. ஜாக்கிரதை"ன்னு கடப்பாரைய தூக்கி கிட்டு திமு திமுன்னு வந்துட்டாய்ங்கண்ணே.."

"அது சரி .நீ ஏண்டா சொடக்கு போட்டே?"

"அதாண்ணே...நீங்களே சொல்லிட்டீங்களே.தூள் பறக்குதுண்ணு..
ஆமாண்ணே.. ஒரு சிட்டிகை பட்டணம் பொடி எடுத்து போடலாம்ணு தான் "சொடக்கு மேலே"ண்ணு பாட ஆரம்பிச்சேன்."

"போடா...ங்ங்.  நீயும் உன் பாட்டும்."பொடி மட்டை"த்தலையா..
ஓடிப்போய்டு....."

(இவர் கையை ஓங்க...அவர் ஓடிவிடுகிறார்)

================================================================
(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக