சனி, 10 மார்ச், 2018

அன்பான ரஜனி அவர்களே !



அன்பான ரஜனி அவர்களே !
==============================================ருத்ரா

எங்கள் அன்பான ரஜனி அவர்களே !
நீங்கள் ஓட்டமும் நடையாய்
இமயமலை ஏறியிருப்பதன்
உந்துதல்விசை எது?
உங்கள் வழக்கமான
"பாபா"வை தேடியா?
இல்லை
அந்த சூத்திரக்கயிற்றின்
மறுமுனைக்கு பூஜை செய்யவா?
எது எப்படியிருப்பினும்
உங்கள் கருத்துக்கள் கேட்க
ஆவலாய் இருக்கும் மக்களுக்கு
மூடிய உதடுகளும்
அல்லது அந்த "ஸ்டைலான" சிரிப்புகளும்
தான் பதில்களா?
ஊடகங்கள் வேண்டுமானால்
அந்த மௌனத்துக்கே
விழா எடுத்து தோரணங்கள்
தொங்க விடலாம்!
ட்விட்டர்கள் வைரல் ஆக்கலாம்.
இந்த கத்துக்குட்டித்  தனங்களையெல்லாம்
ஆண்டவன் சொல்றான்
இவன் கேட்கிறான் என்று
ஃ பிலிம் காட்டுவது
நிச்சயம் நீங்கள் சொல்லும்
அறவழியின் ஆன்மிக அரசியல் அல்ல.
உண்மையில்
காவிரி ஆறு இப்போது
நெருப்பு ஆறு
அதன் பிரச்சினைகள்
இங்கே கொழுந்து விட்டு
எரிந்து கொட்டிருக்கின்றன.
தமிழனின் உரிமைகளை
தந்திரமாய் பறிக்கின்றனர்.
அந்த மூடு திரைக்குள்
ஒரு துர்நாடகம் நடத்துகிறது கர்நாடகம்.
அந்த காவித்திரைக்குள்
தமிழர் நாகரிகமும்
அவன் வளங்களும்
குழி தோண்டிப்புதைக்கப்பட
ஒரு சூழ்ச்சி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
234 தொகுதிகளிலும்
தமிழர்களின் இதயத்துடிப்புகளை
அலைவிரிக்கப்புறப்பட்டிருக்கும்
நீங்கள்
இமயமலையின் ஏதோ ஒரு குகைக்குள்
போயா
தியானம் செய்யவேண்டும்?
பற்றி எரியும் நெருப்புக்காட்டில்
தமிழகம் தத்தளிக்கும்போது
பிடில் வாசிக்கும் நீரோவாக
இமயமலைக்கு ஓடுவதன்
மர்மம் தான் என்ன?
எம் ஜி ஆரின்
"மர்மயோகி அல்லது மந்திரிகுமாரி "படத்தைப்போல
இந்த சாணக்கிய குருக்களின்
சதிகளை முறியடிக்கக்கிளம்பிவிட்டீர்களா?
உங்கள் பஞ்ச் டைலாக்குகள்
வெறும் உச்சரிப்புகள் அல்ல இனி!
இந்த ஜனநாயகத்தின் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்புகள்.
அந்த உயிர் எழுத்துக்களை
ஊர்வலம் போகபயன் படும்
பொம்மை எழுத்துக்களாய் மாற்றிவிடாதீர்கள்.
ஒரு எழுச்சிக்காட்டுங்கள்.
இந்த தமிழகம் காக்க வாருங்கள்!
"நெருப்புடா! கபாலிடா!"
புதிய விடியலுக்கு
ஒரு வெளிச்சம் காட்டட்டும்.

=================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக