புதன், 14 செப்டம்பர், 2022

சுடுமண் நாதஸ்வரம்

 சுடுமண் நாதஸ்வரம்

__________________________________ருத்ரா


Vannadasan Sivasankaran S

51 நி  · 

பைத்தியம் பிடித்த சூளைக்காரன்

செய்து பார்க்கிறான்

ஒரு சுடு மண் நாதஸ்வரத்தை.




வண்ணதாசன் அவர்களே.


உங்கள் அந்த‌

மூன்று வரிக்குள்

அட்னக்கால் போட்டு

உட்கார்ந்து உட்கார்ந்து 

பார்த்துவிட்டேன்.

ஆம்.

படைப்பவன் 

அவன் இறைவன் என்றால்

இன்னும்

வடிகட்டிய பைத்தியக்காரன் தான்.

ஜன்ய ராகம் தன்ய ராகம் 

அது இது என்று

எழுபத்திரெண்டு மேளகர்த்தா ராகங்களை

மில்லியன் கணக்கில் 

சுருட்டி சுருட்டி விரித்து

படுத்து தூங்கி எழுந்து விழித்து

வியர்த்து...

உணருவதை அந்த‌

மலட்டு சுடுமண் நாதஸ்வரம் 

சீவாளி ஊதி 

அமுத எச்சில் வழிய வழிய‌

பெய்து காட்டுமா என்ன?

யார் கண்டது?

அந்த நாதஸ்வரத்தை நிறுத்திவைத்து

உங்கள் மௌன அலைகளை

லேசர் ஆக்கி பாய்ச்சிப்பாருங்கள்.

அந்த ராட்சத டரன்டுலா நெபுலாவுக்குள்

ஒன்றியம் ஆகி விடுவீர்களோ

என்னவோ?

யார் கண்டது?


____________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக