செவ்வாய், 13 செப்டம்பர், 2022

அன்புக்குரிய திரு சியாமளம் அவர்களே

 


அன்புக்குரிய திரு சியாமளம் அவர்களே



எங்கிருந்தாலும் வாழ்க 

என்று 

நீங்கள் எங்களுக்கு

எங்கிருந்து கொண்டாவது

வாழ்த்துகள் வழங்கினால் 

அதன் செழுமையும் செறிவும் 

அற்புதமானது.

ஜனவரி 2021ல் நீங்கள் 

மறைந்து விட்ட போதும்

அது எப்படி உங்கள் எழுத்தாளுமை

இன்னும் இங்கே 

உயிர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது?

நமக்கு இடையில் எப்போதும்

ஓடிக்கொண்டிருக்கும்

அந்த தாமிரபரணி ஆறும்

அந்த மண்டையன் ஆசாரிச் சந்தின்

டிங்கரிங் சத்தங்களும்

அதற்குள்ளிருந்தும் தன்

சிந்தனைச்சம்மட்டியால் நம்

தலையில் தினமும் சமட்டும்

மார்க்ஸின் மானுட இயல்

நிமிண்டல்களும் மறக்க முடியாதவை.

இப்படி

"மறக்க முடியாதவை" என்று

நம் மாணிக்கத்தருணங்களை

நமக்குள் 

குலுக்கி குலுக்கிப்பார்த்துக்கொள்ளும்

இந்த அரிய வாய்ப்புகளை

நல்கும் தோழர் அவர்களே.

இந்த மெல்லிய அருவி ஓசை

உங்களிடமிருந்து

நூற்றாண்டுகளையெல்லாம்

உருட்டிக்கொண்டு

ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

காலங்கள் தோற்றுக்கொண்டே

இருக்கட்டும்.

உங்கள் நினைவுகள் 

எனக்கு எப்போதும்

அந்த "அம்பாந்த்ர"

பச்சை வயல்கள் தான்.


_______________________________________________

செங்கீரன்

(இ.பரமசிவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக