ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

எல்லோரும் கொண்டாடுவோம்

 எல்லோரும் கொண்டாடுவோம்

__________________________________________________



கடவுள் என்பதை 

மனிதனே  உருவாக்கினான்.

மனிதன் முதன் முதலில் 

அறிவு கொண்டு சிந்திக்க தொடங்கிய போது

இது என்ன? 

அது ஏன்? 

இது எப்படி? 

என்ற கேள்விகளால் துளைக்கப்பட்டான்.

எல்லாம் எப்படி தொடங்கியது 

என்பதில் தான் 

அவன் தேங்கிபோனான்.

அது செயற்கையான கொள்ளுதல் (கொள்கை)

ஆக இருக்கும் போது 

இதை வைத்துக்கொள்ளுவோம் என்று

தன் கைப்பிடிக்குள் (பிண்டம்) ளிருந்து 

ஒன்றை உருவாக்கினான். 

அப்படித்தேங்கியவர்களே 

கோவில் என்றும் சிலை என்றும் 

கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முழு மனிதர்களாக 

மேற்பட்ட கேள்விகளை 

இன்னும் கேட்டுக்கொண்டிருப்பவர்களே

இந்த உலக வாழ்க்கையின் வளர்ச்சியை 

உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களுடைய செயற்கை செட்டிங்குகளே

இந்த மதங்கள்.

இந்த பொ(ய்)ம்மைகளை வைத்து 

முதிர்ச்சி அடையாத 

இவர்கள் விளையாடலாம்.

ஆனால் பொம்மை ஆயுதங்களை 

உண்மை ஆயுதங்கள் ஆக்கி 

மனிதர்களை பலிகொள்ளும் அளவுக்கு 

"கெட்ட போரிடும்"நிகழ்வுகளில் வீழ்வது 

மனிதப்பரிமாணத்தின் 

தலைகீழ் வீழ்ச்சி.

இது சாதாரண வீழ்ச்சி அல்ல‌

ஒரு நயாகரா வீழ்ச்சி.

பாருங்கள் அதன் குதியாட்டங்களை.

இரைச்சல்காடுகளில்

அமுங்கிப்போனவை 

மெல்லிய உண்மைகளே.

மனிதனே கடவுள்.

மனிதனுக்கு மனிதனாய்

வாழும் அந்த அன்பு மின்சாரத்தின்

பாய்மமே பிரம்மம்.

அப்படி என்றால் கடவுள் என்று

ஒன்றுமே இல்லையா?

ஆம்.

நான் சொன்னால் நீ கோபம் கொள்ளுவாய்.

நீயே

சொல்லிக்கொள்ளேன்.

ஆம்...

இல்லை.



__________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக