வியாழன், 15 செப்டம்பர், 2022

குற்றாலக்குளியல்

 குற்றாலக்குளியல்

_____________________________

ருத்ரா



பிரபஞ்சத்தைக்கரைத்து

நுரையாக்கி

பூக்களாக்கி...

கிச்சு கிச்சு மூட்டுகிறது

இதயத்துள்

மென் காந்தள் வருடல்கள்.

குற்றாலத்தையே 

நெய்து கொடுத்த துண்டு 

இடுப்பில்.


எங்கிருந்தோ

மரம் செடி கொடி இலை

தளிர் 

பளிங்குப்பாறைகள்

எல்லாம் தடவி விட்டு

என்னையும் தடவுகின்ற‌

மின்னல் துளிகளே.

சில்லிட்டு நுள்ளிவிட்டுப்போகிற‌

அந்த 

திவலைகளில் தெறிக்கிறது

பொங்குமாங்கடலின் ஏக்கம்.

நீலமும் சிவப்புமாய்

கொஞ்ச தூரத்து நீர்ப்படலத்தில்

அந்த மீன் கொத்தி

அந்தக்கெண்டையைக்கவ்விய பின்

மீண்டும் போட்டுவிட்டுப்

போகிறது.

"விழியே!விழியே!

உன்னை உண்ண மனமில்லை" என்று.

இந்த குத்துப்பாறைகளிடையே தான்

முளைக்கிறார்கள்

திரிகூட ராசப்பர்களும்

வைரமுத்துக்களும்.


________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக