வெள்ளி, 2 செப்டம்பர், 2022

அரிதாரம் பூசுகின்றது

 


சொட்டு சொட்டாய் 

என் மீது உதிர்ந்து கொண்டிருக்கிறது.

அதை

பேனாவுக்குள் அடைத்து

அல்லது 

விசைப்பலகையில் 

தட்டச்சுக்குள் கோர்த்து

மாலை தொடுக்கிறேன்.

எழுத்துக்குள் ரசம் பாய்ச்சி

ஒரு கண்ணாடி பிம்பமாய்

என்னைக் காட்டிக்கொண்டேயிருக்கிறது.

அங்கங்கே திட்டு திட்டாய்

ரசம் இல்லாத இடத்தில்

இன்னொரு முகம்

தெரிகிறது.

அது யார்?

அது ஏன் தெரியவேண்டும்?

சிரிப்பு தெரிகிறது.

அதன் அழைப்பின் சுழிப்பில்

நீலக்கடலும் நீலவானமும்

கலந்து கொடுத்த காக்டெய்லில்

கலர் கலர் கனவுகள்

இமை விளிம்பில் 

அரிதாரம் பூசுகின்றது


______________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக