ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

திரைச்சீலை

 சன்னலுக்கு 

பூப்போட்ட துணியில்

திரைச்சீலை மாட்டியிருந்தது

புதிதாய்.

வானம் வெட்கப்பட்டது 

கண்டாங்கிச்சீலை 

உடுத்திக்கொண்டது போல்.

பறவைகளும் அந்த வண்ணக்கிளையில்

கூடு கட்டிக்கொள்ளத் தவித்தன.

உள்ளே வந்துவிட்ட‌

பட்டாம்பூச்சிகளும் மலர்களைத்தேடின.

சிறகுகளில் ஒட்டியிருந்த‌

மகரந்தங்களை

சன்னல் கம்பிகளில்

உதிர்த்துவிட்டுப்போயின.

பூக்கள் மீது

மண்ணாங்கட்டிகளுக்கும்

இங்கு மோகம் தான்.

சன்னலை ஒட்டியிருந்த அந்த‌

மேஜையில்

என் பேனாவும் காகிதமும் மட்டுமே

மலடு தட்டிக்கிடந்தன.


_______________________________________________

ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக