சனி, 3 செப்டம்பர், 2022

உனக்கு புரிந்து போயிருக்கும்

 எப்படி வேண்டுமானலும் 

எதற்கு வேண்டுமானாலும்

கவலைப்படு.

கவலைப்படவேண்டுமே 

என்ற 

கவலையே இல்லாமல்

கவலைப்படு.

கவலைகள் அடர் மழை தான்.

இந்தக் கவலையையே

குடையாக்கிக்கொள்.

கொஞ்ச நாளில் 

உன் அகராதியே மாறிப்போகும்.

எந்தச்சொல்லுக்கு

நீ அர்த்தம் தேடினாலும்

அது கவலை என்றே

அர்த்தம் சொல்லும்.

இப்போது தான்

ஒரு சொல்லின் அர்த்தம்

அகராதியே இல்லாமல்

உனக்கு புரிந்து போயிருக்கும்.

அது

"வாழ்க்கை"


___________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக