வியாழன், 29 செப்டம்பர், 2022

இன்று இதயங்களின் தினம்.

 


இன்று இதயங்களின் தினம் அல்லவா?

உலகத்தின் எல்லா இதயங்களின்

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்

அறைகளுக்குள் எல்லாம் சென்று

தேடிப்பார்த்து விட்டேன்.

என் இதயத்தை அன்று

அந்த ஷாப்பிங் காம்ப்லெக்ஸில்

அவளிடம் தொலைத்தேன்.

அவள் தோழிகள் 

ஒரு பெயரை வைத்துக்கூப்பிட்டதில்

அவள் பெயரை 

உச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

அந்தப்பெயரை அழைத்துக்கொண்டே தான்

என் இதயத்துள் அவள் பெயரை

பதியம் இட்டு க்கொடுத்தேன்.

அன்று இழந்த இதயத்தை தான்

இன்று தேடுகிறேன்.

ஒரு கனவில் சொன்னாள்

இந்த தினத்தில்

எல்லா இதயங்களிலும்

மின்னல்களைக்கொண்ட நெய்த‌

பட்டாம்பூச்சியாய்

சிறகடிப்பதாய் சொன்னாள்.

அதைத்தான் இன்னும் தேடிக்கொண்டே

இருக்கிறேன்.

அந்தப் பெயரின் எழுத்துக்கள் 

எந்த இதயத்திலாவது இன்னும்

ஒலிக்கிறதா

என்று தேடிப்பார்க்கிறேன்.

ஓ!  இதயங்களே சொல்லுங்கள்..

அட..அதற்குள் இருட்டிவிட்டதா?

இந்த உலக தினம் முடிந்து விட்டது.

இனி

அடுத்த உலக தினம் வரட்டும்.

என் தேடல் தொடர்கிறது.


_______________________________________

ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக