வியாழன், 8 செப்டம்பர், 2022

வண்ணதாசன் அவர்களே!

 வண்ணதாசன் அவர்களே!

ஒவ்வொரு கவிஞர்களும் காகிதங்கள் தான்.

அப்படித்தான் உங்கள் 

காகிதங்கள் காற்றில் சிதறிக்கிடந்தன‌

கவிதைகளை கழற்றிப்போட்டுவிட்டு.

வாடகைக்கு எடுத்துக்கொள்ளுவது போல்

அப்படியொன்றை எடுத்து

நானும் ஒரு கவிதை எழுதினேன்.

என் மனம் என்னை இடித்துக்கேட்டது.

என்ன தெனாவட்டு உனக்கு?

நானும் எனும் சொல்லில்

"உம்மை இழிவு " எனும்

இலக்கணக்குறிப்பு மட்டுமே உள்ளது.

ஒரு கவிதையின் நரம்போட்டத்தின்

சுவடு கொஞ்சம் கூட இல்லாமல்

பேனாவின் காக்கா வலிப்புக்கு

எழுத்துக்களை கோர்த்துக்க்கொண்டிருக்கிறாய்.

சரி மனமே! விட்டு விடு என்னை.

ஒரு வழியாய் அதை விரட்டிவிட்டு

அந்த காகிதத்தைத்தேடினேன்.

அது எங்கோ ஒரு மூலையில்

கசக்கி உருட்டி வீசப்பட்டு கிடந்தது.

மோசமான ப்ளேஜியரிசம் எனும் படுகுழியில்

நான் விழுவதை தடுத்ததாய்

அந்த இன்விசிபிள் கைகள் 

அசைந்து கொண்டிருந்தன.

இருப்பினும் தேடினேன் என் கவிதையை.

அது எழுத்துக்களின் 

குவாண்டம் என்டாங்கில்மென்ட்.

அவர் எழுதும்போது

எனது காகிதத்திலும் 

வரிகள் உழுது நெளிந்து வரும்.


____________________________________________________

ருத்ரா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக