வியாழன், 8 செப்டம்பர், 2022

வண்ணதான் ஆற்றுப்படை


இறந்த காலம் 

நிகழ் காலம்

எதிர் காலம்

சூரியனை நெய்து

இந்த சட்டையை 

மாட்டி விட்டவன் மனிதன்.

காலப்பாம்பு நம்மீது

ஊர்வதாய் கொண்டால்

அது

இருபதை நக்கினாலும் சரி

எழுபதை நக்கினாலும் சரி

அதற்கு வெறுமே

உப்பு கரிச்சு தான் கிடக்கும்.

வெறுத்துப்போய் 

கொத்தி விட்டால் மட்டுமே

அந்த மரணத்தில்

பிரம்மம் சுவைக்கும்.

வேறு என்ன சொல்வது?

எலுமிச்சைப்பழத்தோலில்

தீபம் ஏற்றி

கால பைரவனிடம்

கேட்டுப்பார்க்க வேண்டும்.

___________________________________

ருத்ரா


(வண்ணதாசன் கவிதைகளுக்குள்

பயணம் போக நான் எழுதிய‌

வண்ணதான் ஆற்றுப்படை)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக