புதன், 28 செப்டம்பர், 2022

இது எத்தனையாவது சூத்திரம்?

 அந்த மூலையில் 

சிலந்தியின் அற்புதமான வலை.

அந்த அற்புதங்கள் எல்லாம்

சின்ன சின்ன பூச்சிகளின்

வண்டுகளின்

சமாதிகளாயின.

அவையும் அற்புதமாக‌

சுருட்டப்பட்டு சுருட்டப்பட்டு

சித்திரங்கள் பேசின.

பிரம்மசூத்திரம்

பிரம்மத்தைப்பற்றி

555 சூத்திரங்கள் 

சொல்லியிருக்கின்றன.

சங்கரர் மட்டும் பாஷ்யம் 

எழுதவில்லை.

இந்த சிலந்தியும் 

எழுதிக்கொண்டே இருக்கின்றது.

கடவுளைப்பற்றி

நினைத்துக்கொண்டே இருந்தேன்.

சிலந்திப்பூச்சி 

என்னைச் சுருட்டிக்கொண்டே 

இருக்கிறது.

இது எத்தனையாவது சூத்திரம்?

_________________________________________________

ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக