செவ்வாய், 27 செப்டம்பர், 2022

முற்றுப்புள்ளி இல்லாமல்...

 ஆதலினால் காதல் செய்வீர்

பாரதி

நறுக்கென்று தலையில் குட்டி

சொல்லி முடித்தான்.

அது என்ன

இப்படி ஜிவ்வென்று ஏறுகிறது?

என்ன கணேசா?

நலம் தானே என்று

ரெண்டு தட்டு தட்டியிருப்பான் அவன்.

அதற்கும்

இப்படித்தான் ஜிவ்வென்று ஏறியிருக்கும்.

திருவல்லிக்கேணி கோவிலில்

அவனுக்கு 

முற்றுப்புள்ளி விழுந்து விட்டது.

பாரதியின் குயில் பாட்டு

எங்கிருந்தோ கேட்கிறது.

"காதல் காதல் காதல்"

முற்றுப்புள்ளி இல்லாமல்...

_____________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக