வெள்ளி, 1 மே, 2020

கொரோனாயணம்


கொரோனாயணம்
===================================ருத்ரா

வீட்டுக்குள்
வனவாசம் 
பதினாலு மாசமா?
சர்வாதிகாரமும் அலட்சியமும்
மாரீசனும் சுபாகுவுமாய்
சேர்ந்து செய்யும் மாயமா?
கொரோனா ஆரண்யம்
உயிர்கொல்லும் பெருங்காடா?
பொருளாதாரம் எனும்
பொய் உருவ ராவணனுக்கு
பத்து தலை ஒட்டவைத்து
சுரண்டல் வதம் நடக்கிறது
மக்கள் மீது ஒரு யுத்தமாய்!
ஜனநாயக சீதையை அவர்கள்
தீக்குளிக்க வைத்துவிட்டு
பத்து பனைமரத்து உயரத்தில்
சிலை எடுப்பார்கள் 
ராமனுக்கு
சிலை எடுப்பார்கள்.
பல்லாயிரம் 
கோடிகளில் அறக்கட்டளையாம்!
அறமற்ற அறம் ஒன்று
சாதி மத பூதம் வளர்த்து
மக்களை இங்கு
தின்று தீர்க்கத் துடிக்கிறது.
உங்கள் ஓட்டுகளை
உங்களுக்கே செங்கலாக்கி
கல்லறை கட்டுகின்ற‌
சாணக்கியம் புரிந்து கொள்வீர்.
சரித்திரம் புரிந்து கொள்வீர்.
கடவுளுக்கு வைக்கின்ற‌
கற்பூர நெருப்பு இனி
எரிமலைகள் ஆகட்டும்.
பகுத்தறிவின் சுடர் பூக்கும்.

========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக