சனி, 16 மே, 2020

கலித்தது தமிழ்

கலித்தது தமிழ்
=========================================================ருத்ரா

பீடுகெழு நெடுந்திரையன் களிறு படர்ந்தன்ன‌
அலைகடல் ஆர்த்தெழவே அஞ்சுதல் அவன்கண்
அஞ்சுதல் செய்தொழிய கலன்கள் ஆயிரம் கூட்டி
கடுவளி சூர்கொண்டு விரிநீர் சுருட்டல் க‌ண்டும்
நிமிர் அகலம் நேர்கொண்ட அவன் பாங்கு உற்று
கனைகுரல் எல்லனும் திங்களாய் எதிர் தந்தனனே.
திரையம் அகல்நாட்டின் நுரைப்பூக்கள் கரை மடுப்ப
கல் என்று திறவோன் விறல் காட்சி கொளீஇய‌
மண்ணிய மலர்தலை உலகெலாம் கொண்டான்.
எற்றுக்கு ஒரு சொல் ஈண்டு நீ ஈன்றாய்
சென்றவன் மீட்டு துப்பின் மிகு தருவானோ
அன்றி கடல் உண்ணக்கொடுத் தாங்கே
மறைவானோ.மருளும் மருளும் மாயும் என் நெஞ்சு என.
கடல் சாரும் நாடெல்லாம் அவன் கொடியே
நுடங்கி நிற்கும்.மண்ணெல்லாம் அவன் பண்டம்
விலை நாட்டி அவன் வெற்றி நீடு பகரும்.
அலை கடந்து அவன் கொண்ட மொழியாவுமே
தமிழ் ஆகும் ஈண்டு தமிழே ஆகும்.
ஒலிக்கலம்பகம் முறைசெய்து மறையாகும்மே
மறைமொழியும் நிகழ்மொழியும் நிரல் ஆகும்மே
இவண் இங்கு கோலோச்சி மொழி மலர்த்தி
நிறைமொழியாய் மாந்தரிடை நம் தமிழே
எங்கும் அது நிழல் தோய இறை கொள்ளுமே.
திரை நாடு நம் நாடு என்பரே போன்ம்
இத்திரையிடமே திராவிடமாய் உலகாளுமே.
நம்மிடையே இஃது எதிர்கொள்ளா தமிழர்களே
"ஆர்"த்தெழு "ஆரி"யராய் இனம் வகுத்து கிளைத்தனரே.
ஆர்கலி அருந்தமிழே ஆரியருள் உள்ளோலிக்கும்.
தமிழின் ஒலிஆறு ஐது ஆங்கு பல்கிளவி இமிழ்க்கும்
வகை அறிவார் மாட்டே தமிழ் வாழும் தமிழ் ஆளும்
என வாங்கு
நீர்வேலி இட்ட தொரு நெடு மண்டிலம்
இமையாதே விழித்துயரும் மலை மண்டிலம்
எல்லாம் அமைந்தொரு பால் உயர்நாடாய்
உய்விக்க கடல் கடந்தான் உணர்மதி திருந்திழாய்.
மொழிந்தவாறு கேட்டவாறு முறுவல் செய்தாள்
உடன் நின்று சொல் அவிழ்த்து அணைந்த தோழி!
கலித்தது தமிழ் என்று களித்தொகை ஆற்றுப்படை
யாத்ததுபோல் அவர் இறும்பூது உற்றனரே காண்.

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக