புதன், 27 மே, 2020

"பக்தா"


பக்தா
உன் பக்தியை மெச்சினேன்.
என் மீது உள்ள பக்தியைக்காட்டிலும்
கொரோனாவின் மீதுள்ள பக்தியால்
எனக்கு பூட்டு போட்டு விட்டாய்.
அல்லது
என் மீது உள்ள பிரியத்தால் 
அந்த கொரோனாவிடமிருந்து காப்பாற்ற‌
எனக்கு பூட்டு போட்டிருப்பாய்.
சரி.
இப்போதாவது புரிந்து கொண்டாய்
கண்ணுக்குத்தெரியாத அந்த வைரசும்
நானும் ஒன்று தான் என்று!
அப்படியென்றால் 
எதற்கு அந்த கர்மம் பிடித்த‌
நான்கு வர்ண புருசு.
தூக்கி எறி அதை.
அப்போது தான்
நான் உன்னிலும் 
நீ என்னிலும் 
இருப்பதாய் அர்த்தம்.

=====================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக