புதன், 6 மே, 2020

எந்நாளோ?


எந்நாளோ?
--------------------------------------------------ருத்ரா

வெண்கொற்றக்குடை ஏந்தி
இமயத்தையும்
வென்ற தமிழனே!
ஒரு பாட்டிலுக்காக‌
அதற்கு ஒரு இடைவெளிக்காக‌
கருங்குடை ஏந்தி போதையின்
கனவுக்கு ஒரு கியூவில் நின்றாய்.
வீழ்வது தமிழாயிருந்தாலும்
நிமிர்வது என் பாட்டில் என்று
தள்ளாடும் தமிழனே!
இந்த கண்ணாடிக்கல்லறைக்குள்
அமிழ்ந்து போகாமல்
நீ உயிர்த்தெழும் நாள் எந்நாளோ?

-------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக