வியாழன், 28 மே, 2020

ஒற்றைக்கண்ணாக்கி...



   ஒற்றைக்கண்ணாக்கி...
================================================
ருத்ரா 




 உடம்பெல்லாம் காடாகி 
ஒரு மனத்தின் நினைவாகி 
ஓர்மையை 
நான் அங்கு 
கூர்மையான ஓர் 
ஒற்றைக்கண்ணாக்கி 
ஒடுங்கி இருந்தேன்.
வானம் நீலச் சமுக்காளத்தை 
விரித்துக்காத்துக்கிடந்தது .
யாருக்கும் யாருக்கும்
அங்கே
நிச்சயதார்த்தம்?
மௌனத்துக்கும் மௌனத்துக்கும் தான்
அங்கே கல்யாணம்!
சத்தமும் இரைச்சலுமே
சங்கீதமாகிப்போன இல்லறம் தானே
இனிய அறம் .
வண்டுகளின் ரீங்காரமும்
பூக்களின் இலைகளின் உரசல் ஒலிகளும்
அந்த மெல்லிய வானம்
  எனும்
சல்லாத்துணிப்படலத்தை
ஒவ்வொரு விநாடித்துளியைக் கொண்டும் 
நெய்துகொண்டிருக்கின்றனவே.
அந்த நெய்தல் கானம்
ஓ!
வானமே!
உனக்கு கேட்கவில்லையா?
கேட்டு விட்டது வானத்துக்கு.
உறுமல்  தொடங்கி விட்டது.
இடியும் மின்னலும்
இப்போது ஊசியும் மின்னலுமாய்
ஆகிவிட்டது.
வானத்தின் அழகிய சங்கீதம்
அரங்கேறத்துவங்கி விட்டது.


================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக