சனி, 16 மே, 2020

பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை

பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை
======================================ருத்ரா
(ஒலைத்துடிப்புகள் ...28)



பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை மூசி
அறைதவழ் ஓங்கு வெள்ளிய அருவி
படர்தந்தாங்கு சடைமறைத்த ஊழில்
எதிர்த் தடம் ஊன்றிய‌ நினைப்பில் ஊறித்
திளைத்த காலை மறவேன் மறையேன்
என்றவன் திரங்கிய தோளும் துடித்திட‌
உள் எரியாற்றில் கரிந்தும் ஒளிர்ந்தான்.
அவனுக்கும் விரிந்து திறந்தது வானம்
வெள்ளைக்கனவிலும் மின்னல் தைத்தது.
அவள் வாணுதல் இன்னும் பாசடைக் கரைய
தண்பொழில் தருவென வீமழை தூவும்.
அவள் மின்னிய முறுவல் நரை கண்டது இல்.
வேங்கை வரிய வெண்சுரத்தன்ன வெள்ளெனத்
தோன்றும் வெளியிடையும் நீளும் அவள்
விழிப் பூந்தாதின் நீறாடு களத்தில்.

================================================

நரையுண்ட போதும் காதலின் இரையுண்ட‌
தலைவனின் நினவு மழை பற்றிய ஒரு
சங்கநடைக்கவிதை இது.

==================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக