சனி, 9 மே, 2020

அம்மா என்று அழைக்காத...

அம்மா என்று அழைக்காத...
______________________________________________ருத்ரா

அம்மா என்று அழைக்காத...
...உயிரில்லையே"
இளையராஜா 
அவர் அம்மாவை நினைத்திருப்பாரா?
எழுதிய கவிஞரின் பேனாவுக்குள்
அம்மாவின் ரத்தம்
முலைப்பாலாக ஊறி
அந்த காகிதத்தை நனைத்திருக்குமா?
இன்னும்
அந்த இசைக்கருவிகளின்
நரம்புகளும் 
தோல்களும்
துளைகளும்
அந்த அம்மா என்ற‌
பெருவெள்ளத்தை வழிய விட்டிருக்குமா?
ஆனால்
அம்மா...
இந்த கொரோனா பிரளயத்தில்
நீ தான்
எங்கள் "நோவாவின் கப்பல்"
எல்லா உயிர்களும்
தன் இனத்தை பெருக்கவும் காக்கவும்
துடிக்கின்றன.
அந்த வைரசும் 
அப்ப்டித் துடித்து தான்
பில்லியன்களின் எல்லையின்மையாய்
ஒரு இறைவத்தின்
விளிம்பை அடைகின்றதோ?
ஆம்.
அடித்தாலும் பிடித்தாலும்
கொன்றாலும் தின்றாலும்
அம்மா எனும்
குரல் மட்டும்
இங்கு அமுதப்பிரவாகம் தான்.
அம்மா..
அது குரல் மட்டும் அல்ல.
அது..
மரணங்களில் ஜனனம்.
ஜனனங்களில் மரணம்.

‍‍‍‍‍‍‍‍‍_______________________________________‍‍‍‍___



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக