சனி, 16 மே, 2020

நாண்முறை தபுத்தீர் வம்மின்"

நாண்முறை தபுத்தீர் வம்மின்"
=========================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ...29)



செருக்களம் உறுமும் குமரிப்படைய‌
கொடுவேல் கூற்றம் அறையும் குரல் இது.
பூவிலைப்பெண்டு கூவித்தீர்த்த 
காஞ்சியும் தீர பூவலை இங்கு தீயலையாக‌
அமர்க்களம் யாவும் அலைஎறி கடலாய்
வேல்படை மிடைய குருதிகுளிக்கும்
உடலம் மிதக்க உறுபகை நீர்க்க‌
சென்றவன் பீலி பிலிற்றுக்கண்ணிய‌
வெருவகை தந்த வாகை சூடி 
வரும் என்று விழியினை அப்பிக் கிடந்த‌
முன்றில் நீளும் வரிஅணில் கீறொலி.
கூற்று தழீஇய வரினும் அவன்
பகைத்தடம் நூறி வென்றிபல குவிக்கும்.
ஆயிரம் முறுவல் ஒப்பக்கிளர்ந்து
புல்லென ஒருசிற்றசைவில் அவன்
தலை சாய்த்தும் சாயாது என் ஞாலமே!

================================================
புறநானூற்றுப்பாடல்கள் 293ம் 294ம் இங்கு
எனது இந்த சங்கநடைக்கவிதையில் கருக்கொண்டு
உருக்கொண்டது.
=========================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக