வியாழன், 28 பிப்ரவரி, 2019

சிவப்புத்தோகை



சிவப்புத்தோகை 
=========================================
ருத்ரா 


எங்கே உன் கையைக்காட்டு.
மெகந்தி  போட்டிருக்கிறேன் என்றாயே 
பார்க்கிறேன் என்றேன்.
ஆனால் 
அவள் உள்ளங்கை விரிந்ததும் 
திடீரென்று 
ஒரு மயில் அதிசயமாய் 
சிவப்புத்தோகையை விரித்து நின்றது!
ஏன் இந்த சிவப்பு ?
அப்பாவியாய் கேட்டேன் .
அவள் 
"க்ளுக்"கென்று சிரித்து விட்டு 
படக்கென்று பதுக்கிக்கொண்டாள் 
முகத்தை 
அந்தக்கையில்.
அவள் இதயத்தை அல்லவா 
விரித்துக்காட்டியிருக்கிறாள் !
பாருங்கள் 
அந்த "கல்வாழை" மங்கைக்கும் 
நாணத்தின் சிவப்பே 
உயிர்ப்பு.


====================================================================
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில்  ஓக் பார்க்கில் ஒரு பள்ளியின் வாசல் அருகே நான் நடைபயின்றபோது.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக