புதன், 20 பிப்ரவரி, 2019

தனிமை இடம்.


அகத்தியன் அருவி . பாபநாசம்.



தனிமை இடம்.
==============================================ருத்ரா

என்ன தேடுகிறது இங்கே
இந்த மௌனம்?
தூரத்து அருவிக்குள்ளும்
புகுந்து
ஒரு இதயம் தேடுகிறதா?
நீரின்
பளிங்கு பிம்பம்
ஒரு சிறு இலை விழுந்து
வட்ட வட்டமாய்
ஒலி பரப்புமுன்
அந்த மௌனம் சுக்கல் சுக்கலாய்
போய்விடும் முன்
மூளிவானமே
உன் கனவு என்னவென்று
சொல்லிவிடு.
வானமே இல்லாத ஒரு வானத்தை
தேடிக்கொடு
அதன் உட்கூட்டில்
ஒரு விடியல் கசியும்.
அதுவே அவளுக்கு நான்
சொன்ன வார்த்தை என்கிறாயா?
அவள் சிரித்தது
இந்த அண்டம் முழுவதும்
இண்டு இடுக்கு இல்லாமல்
நிரம்பிக்கொண்டது.
இதில் தனிமை இடம் ஏது?
இப்போதைக்கு அந்த அருவியின்
நீர்த்துளியில் ஒளிந்து கொள்.
அது
கீழே விழுந்து சூரியனில் கலந்து
ஏழு வர்ண ரத்தம் சிதறுமுன்
உன் வானவில்லிலிருந்து
ஒரு பொய்வண்ணத்தின்
கணைதொடு அவள்
இதயம் நோக்கி.

========================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக