செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

இன்றும் சொல்கிறோம்...

இன்றும் சொல்கிறோம்...ஜிந்தாபாத் !
=============================================ருத்ரா

பாகிஸ்தானே!
புல்வாமாவுக்கு
போதுமா
பதிலடி?
நீ வளர்த்த‌
தற்கொலைப்படைகளே
உன் பொருளாதாரத் தற்கொலை.
தீவிரவாதமா உன்
தேசியத்தொழில்?
உன் மக்களுக்கு நீ
துப்பாக்கிக்களை
உணவாக
கொடுக்கத்துவங்கி விட்டாய்.
இந்தத் துப்பாக்கிகளுக்கு
ஓ பாகிஸ்தானே
இனி நீயே தான் தீனி.
கொஞ்சமும்
பாக்கியில்லாமல்
ஓ பாகிஸ்தானே நீ
அழிந்து போய்விடாதே!
உனக்குத்தெரியுமா?
உனக்கு எதிராக நாங்கள்
நீட்டிய இந்த துப்பாக்கியின்
குண்டுகள்
குண்டுகள் இல்லை.
நம் இருவரிடையேயும்
பூக்க வேண்டிய
நட்பின் ரோஜாகள்!
அந்த நட்பின்
ரோஜா இதழ்களை பிய்த்து விட்டு
தீவிரவாத முட்களை
பதியம் போடுவதை
இத்துடன் நிறுத்திக்கொள்.
அன்று நம்மை கைகுலுக்க வைத்து
நம்மைப் பிரித்த வெள்ளையன்
இந்த போர்க்குண்டுகளையும்
அந்த பூச்செண்டுகளுடன்
மறைவாக புதைத்துத்தந்த‌
சூழ்ச்சியை
எப்போது நீ புரிந்து  கொள்ளப்பொகிறாய்
அன்பான‌ பாகிஸ்தான் நண்பனே!
இன்றும் சொல்கிறோம்.
பாரதம் ஜிந்தாபாத்!
பாகிஸ்தானும்  ஜிந்தாபாத்!

=============================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக