செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

மூன்றாவது கூட்டணியும் கமலும்.

மூன்றாவது கூட்டணியும் கமலும்.
=========================================ருத்ரா

மூன்றாவது கூட்டணி என்று
புதிதாய்
ஒரு மூன்றாம் பிறையை
படம் காட்டப்பொகிறாரா
கமல்?
இந்த முறை பைத்தியம் பிடிக்கப்போவது
வாக்காளர்களுக்கே.

திராவிடம்
தமிழ்
சிந்துவெளி
என்றெல்லாம் கூறியவர்
ஒரு சந்து வெளியில்
சரித்திரம் படைக்க கிளம்பியிருக்கிறார்.

தமிழனின் இதயத்துடிப்புகளை
அறிந்து கொள்ளாதவர்
"மையத்"த்தை "மய்யம்" என்று
எழுதினால் மட்டும்
தமிழ்ப்புரட்சிக்காரன் ஆகிவிடமுடியுமா?

ஊழல் ஒரு அரக்கன் என்றும்
இதன் வதத்திற்கு
திருமாலும் அவதாரம்
எடுக்க முடியாது
என்றும்
அவர் நன்கு அறிவார்.

பழைய ம.ந.கூ
ஓட்டுகளை
அல்வாத்துண்டுகளாய்
அம்மாவுக்கே
விழுங்க கொடுத்தது போல்
இவரது
ம.நீ.ம வும்
பாஜக அதிமுக  கூட்டணிக்கு
ஓட்டுகளை லட்டுகளாய்
விழுங்க கொடுக்க
தயாராகி வருகிறதா?

பிரித்தாளும் சூழ்ச்சியில்
நாம் இன்னும்
நான்கு வர்ணம் பூசிக்கொண்டு
நிற்கிறோமே!
ஓட்டுகள் பிரிவது
ஆதிக்க சக்திகளுக்கு
ஆதாயம் என்று
கூரைப்பள்ளிக்கூடத்து
ஒண்ணாம் கிளாஸ் பிள்ளைக்கும்
எளிதில் புரிந்த
ஒரு அரசியல் அல்லவா?


எனக்குள் ஓடுவது
காங்கிரஸ் ரத்தம்
என்றார்.
காங்கிரஸ்காரர்களே
திமுகவை கழற்றிக்கொண்டு
வாருங்கள் என்று சொன்னார்.
காங்கிரஸின் முந்த்ரா ஊழல் தானே
முதல் ஊழல்.
அப்புறம் எதற்கு இந்த‌
ஊழல் எதிர்ப்பு "ஊதுகுழல்?"

கிராமசபைக்கூட்டத்திற்கு
நான் தான்
"காப்பி ரைட்" வைத்திருக்கிறேன்
என்று
சலசலப்புகள் காட்டினார்.

இந்தியா பூராவும்
மூன்றாவது கூட்டணிக்கு
முகாம் நடத்துகிறார்.
பிஜேபியின் வெற்றிக்கு
"கேக் வாக்" எனும்
வெண்ணைப்பாதை போடுகிறார்.

அறிவு ஜீவித்தனமாய்
பேசி வந்த‌வர்
அசட்டுத்தனத்தின்
சிகரத்தில் அல்லவா நிற்கிறார்.

தேர்தலுக்குப்பிறகு நடக்கும்
"இசை நாற்காலி"போட்டியில்
நடக்கும் குதிரைப்பேரங்கள்
நம் ஜனநாயகத்தை
மேலும் மேலும் "மலடு"
ஆக்கும்
அசிங்க சித்திரங்களைத்தான்
நாம் கண்டு கொண்டு வருகிறோம்.
இது தான் இவரது
"இந்தியன் 3" யா?

=============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக