வியாழன், 28 பிப்ரவரி, 2019

நுண்சிறைத்தும்பி



நுண்சிறைத்தும்பி
=====================================ருத்ரா இ பரமசிவன்.

நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாற்போல்
நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
தொண்டை சுற்றிய குவளையன்ன‌
தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.


---------------------------------------------------------------------

தட்டாம்பூச்சியின் நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர‌
அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல‌
அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் "தொடி" நெகிழும் வண்ணம்
பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.இங்கே "காலை" என்பது சூரியனின் கதிரோவியத்தையும் குறிக்கும். இதுவே அந்த "நுண்சிறைத்தும்பி"யாய்  ஒளியும் நிழலும் கலந்த அந்த காட்சியில் தலைவிக்கு தோன்றுகிறது!

மேலே நான் எழுதிய சங்க நடைக்கவிதையில் இது ஒரு காதலின் எழில் பொங்கும் காட்சி.

==========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக