சனி, 16 பிப்ரவரி, 2019

தண்ணீரில் தண்ணி காட்டும் ரஜனி

தண்ணீரில் தண்ணி காட்டும் ரஜனி
=================================================ருத்ரா

கனவு கண்டு கொண்டிருக்கும்
கட்சிகளுக்கு
தண்ணி காட்டவே
சூபர்ஸ்டார் "தண்ணீர் பிரச்னையை"
கையில் எடுத்திருக்கிறார்.
காவிரி கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும்
எப்போதும் சூடாகவே
ஓடுகின்றது.
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.
இங்கே உள்ள எடப்பாடி
அங்கே உள்ள சிம்மாசனத்திற்கும்
அங்கே உள்ள குமாரசாமி
இங்கே உள்ள சிம்மாசனத்துக்கும்
மாறி வந்து
உட்கார்ந்து கொள்கிறார்கள் என்று
வைத்துக்கொண்டால்
எடப்பாடி மேகதாட்டு அணையை கட்ட‌
வேகம் காட்டுவார்.
குமாரசாமி மேகதாட்டு அணையை
கட்டாமல் முடக்கவேண்டும் என்பார்.
இந்த
நாற்காலி சைக்காலஜியைத்தான்
தண்ணீர் பிரச்னையில் வைத்து
தண்ணி காட்டுகிறார் ரஜனி.

ரஜனி மக்கள் மன்றம்
நாடாளு மன்றத்தேர்தலில்
கையைக் கட்டிக்கொண்டு நிற்கப்போகிறதா?
அப்படித்தான்
தங்கள் கொடி பேனர் போன்றவற்றையெல்லாம்
சுருட்டி வைத்துவிட்டு
தங்கள் தங்கள் குடும்பங்களைப்போய்
கவனியுங்கள் என்கிறாரா சூபர்ஸ்டார்?
அமித்ஷாக்களும் தமிழருவி மணியன்களும்
நகம் கடித்துக்கொண்டிருக்கட்டும்.
அவர் "வாய்ஸ்"
எங்காவது எப்படியாவது
கசியுமா
என்று காத்துக்கிடக்கின்றனர்
கட்சிக்காரர்கள்.
அவருக்கோ
தன் சின்னமகள் வயிற்றுப்பேரன்
"வேத்"பற்றிய அக்கறையும் அன்பும் தான்
இப்போதைக்கு முக்கியம்.
ட்விட்டர் என்றால் சிட்டுக்குருவி சிறகடிப்பு
என்று தானே அர்த்தம்.
ட்விட்டர்களே!
உங்கள் முரட்டு செவிகளுக்கு
இசை அமைத்து இன்பம் காண‌
"காக்காய் இரைச்சல்களாய்"
அந்த மெல்லிய பிஞ்சு "வேத்" பற்றி
ஆலவட்டம் போடுவதை
நிறுத்திக்கொள்ளுங்கள்.
வேண்டுமானால் அவர் கை காட்டிய‌
தண்ணீர் பிரச்னைக்கு
வெளிச்சம் காட்டுங்கள்.
வாழ்க!
ரஜனியின் மக்கள் மன்றம்!

===================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக