வியாழன், 7 பிப்ரவரி, 2019

நாற்பதுக்கும் தயார்..கமல்!

நாற்பதுக்கும் தயார்..கமல்!
==============================================ருத்ரா

பாராளுமன்ற தேர்தலில்
கமல்
ஒரு புயல் அடிக்கத்தயார்.
அவர் நீதி மய்யத்தில்
அந்த புயல் கரு தரிக்குமா?
அவரைத் தொடர்பவர்கள்
அந்த புயலை சுவாசித்துக்கொண்டு
புறப்பட்டு விட்டார்கள்.

ட்விட்டர் நாயகனாய் இருந்த‌
அந்த உலக நாயகன்
கணினியை விட்டு கீழிறங்கி
கட்டாந்தரையில்
கால் பதிக்கத்துவங்கி விட்டார்.

திராவிடமே
இந்திய மண்ணின் வாசம் என்றார்.
அப்புறம்
திராவிடம் என்ன குடும்ப சொத்தா?
என்று கேட்டார்.
கொசஸ்தலை ஆற்று
முகத்துவாரத்தில்
தமிழகத்தின் முகத்தையே மாற்றி
ஒரு "பட்டினப்பாலை"யின்
இலக்கியத்தை பூக்கச்செய்து விடலாம்
என்றார்.

மோடியிஸம் என்பது
வளர்ச்சியிஸம் என்று சொன்னாலும்
அதன் ஒவ்வொரு அணுவிலும்
ஒரு மதம் சார்ந்த பூதம்
கோரைப்பல் காட்டிக்கொண்டிருக்கிறது
என்று
நன்றாகவே அறிந்த கமல்
நாற்பதுக்கும் நாங்கள் தயார் என்பது
மூச்சுப்பிடித்து
கபடி ஆடும் ஜனநாயக விளையாட்டில்
ஊடே புகுந்து
அதன் மூச்சை நிறுத்தும்
ராஜதந்திரம் தானே.
இந்த ராஜதந்திரம்
மோடியின் வழியாய் கமலுக்கு
வந்திருக்கலாம்
என்று இந்த
திராவிட மண் நினைக்கிறது.
துவக்கத்தில்
திராவிடம் எனது மூச்சு என்றவர்
இப்போது
சும்மா விளையாட்டுக்கு
இந்த ஆக்சிஜன் சிலிண்டர் இணைப்பை
பிடுங்கிப்பார்க்கிறேன்
என்று "தெனாலி" பாணியில்
ஜோக் அடிக்கலாம்.
அந்த உலகநாயகனுக்கு
திராவிடம் எப்போதோ அலர்ஜி ஆகிவிட்டது.

============================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக