சனி, 23 பிப்ரவரி, 2019

முகத்திரை



முகத்திரை
========================================ருத்ரா

முகத்திரையில்
மறைத்துக்கொண்டு
வழிய விட்ட
உன் புன்னகை
என் நெஞ்சுக்குள்
ஒரு ரோஜாக்காடு.

வருடுகின்ற கிளைகளில்
இலை நுனிகளில்
நகப்பூச்சு இல்லாத
உன் விரல்கள்
இசைக்க
என் நரம்புகளுக்குள்
வா!
இனி என் பாழ்வனம்
ஒரு யாழ் வனம்

நெசவு செய்யப்பொறுக்காத
அவசரத்தில்
இந்த பஞ்சுச் சிதறல்களை
உடுத்துக்கொண்டாயே
பார்!
இந்த வானம் வெட்கப்படுகிறது.

இது ஒரு
ஆரண்யப்பிஞ்சு.
உன் உள்ளத்தின்
முழுக்காட்டில்
ஆயிரம் நிலாக்களை
அல்லவா
புதைத்து வைத்திருக்கிறாய்!

===========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக