வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நீ



நீ 
===========================================
ருத்ரா இ பரமசிவன் 


நீ  யார்?
நாங்கள் உன்னைத்தேடுகிறோம்.
நீ 
கருங்கற் சுவரா?
உச்சியில் தக  தகக்கும் பொற்கோபுரமா?
லட்சக்கணக்கில் சுலோகங்களா ?
புரியாத ஒலிகளா?
புரிந்த ஒலிகளிலும் 
தெளியாத படிமங்களா?
நாலுவர்ணத்தில் முதல்வர்ணத்தார் 
எச்சில் தெறிக்கும்  சொற்களிலா நீ?
ரிக் வேதம் 
வானத்திலேயே 
இன்னும் விரிக்காமல் உறைந்து கிடக்கும் 
ஒலிகள் என்று தானே
ரிஷிகள் சப்திக்கிறார்கள்.
மனிதர்களின்  நாவில் வருடப்பட்டு 
வார்த்தைகள் ஆகும்போதே
நீ 
தீட்டு அடைந்ததாக அல்லவா சொல்கிறார்கள்.
 அந்த முதல்வர்ணத்தார் நாவுகளில் 
எச்சில் பட்ட 
உன்னை 
சம்புரோக்ஷணம் செய்ய 
நீ தானே 
கீழே இறங்கி வரவேண்டும்?
உனக்கு பதிலாய் 
இந்த வயற்சேறுகளில் 
சுடுகாட்டு சாம்பற்பூக்களில் 
உழன்று வாழ்ந்து 
புனிதமாகிப்போன 
இந்த நாலு அஞ்சு வர்ணத்தாரை 
நீ 
அனுப்பியிருப்பது 
அந்த வர்ணத்தாருக்கு 
ஏன் இன்னும் புரிபடவில்லை?
இந்த முப்புரியிலும் 
புரிதல் ஆகாமல் 
நீ 
எந்த புரியில் இருக்கிறாய் கூறு?

==================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக