வெள்ளி, 1 நவம்பர், 2019

அம்புக்கூடு

அம்புக்கூடு
__________________________________________ருத்ரா

எத்தனை எத்தனை தடவைகள்
என் மீது எய்தாய்
கண்களைக்கொண்டு ?
கணக்கு வைத்திருக்கிறேன்.
என் இதய ஏட்டில்.
நீ சல்லடையாக்கும் வரை
உன் பக்கம் திரும்பமாட்டேன்.
அப்புறம்
அதன் வழியாய் ஒழுகும்
தேன் கடலில்
நான் எப்படி நீந்திக்களிப்பது?
பெண்ணே!

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக