புதன், 27 நவம்பர், 2019

இது தான் அது.

https://tamil.oneindia.com/news/madurai/enemies-have-to-die-before-we-come-to-power-otherwise-they-will-face-action-says-seeman/articlecontent-pf417879-369786.html

இது தான் அது.
========================================ருத்ரா

கிளை விட்டு கிளை தாவும்.
யாரேனும் உற்றுப்பார்த்தால்
உர்ரென்று
வலிப்பு காட்டும்.
தேவையில்லாமல்
குட்டிக்கரணங்கள் போடும்.
இங்கிருந்தே இலங்கைக்கு தாவும்.
அங்கிருந்து தமிழ் நாட்டுக்கு தாவும்.
சம்பந்தா சம்பந்தமில்லாமல்
அதை
ராமா ராமா
என்று தான் கூப்பிடவேண்டும்.
மாமியார் செத்துவிட்டதாய்
மார்பில் மார்பில் அடித்துக்கொள்ளும்.
தண்ணீர் சுமந்து வருவது போல்
கைகளை தலை மேல் வைத்துக்கொண்டு
தள்ளாடி நடந்து வரும்.

புலிகள் எல்லாம்
அதுவே போட்ட குட்டிகள்
என்று
மீசை முறுக்கும்
பல்லைக்கடிக்கும்.
நரம்புகள் புடைக்கும்.
இதை "அட்மிட்"செய்துகொள்ள
பத்து
கீழ்ப்பாக்கங்கள் கூட
பத்தாது.
இதன் கையில் ஒரு பூமாலை.

தமிழ்
தமிழர்
திராவிடம்
தமிழின் முருகக்கடவுள்
அண்ணா
பெரியார்
கலைஞர்
ஜன நாயகம்
ஈழத்தமிழர்
கொஞ்சம் சினிமா
வெந்தும் வேகாத
சில இளைஞர்கள்
ராஜிவ் காந்தி

இத்தனைப்பூக்களையும்  கொண்ட
அந்த பூமாலை
அதன் கையில்
என்ன பாடு படுகிறது ?
பூக்களைப்பிய்த்து பிய்த்து
தின்கிறது.
கழுத்தில் போட்டுக்கொண்டு
சுற்றி சுற்றி முறுக்கி
கழுத்தையே நெரித்துக்கொள்கிறது!

இது
இஞ்சி தின்று
கள்ளும் குடித்து
தேளும் கொட்டி

எப்படியெல்லாம்
திருக்கு முறுக்காய்
வில்லங்கம் செய்யும்?
தெரியுமா?

அது தான் மேலே உள்ள சுட்டியில்
காணும் பேச்சு.

============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக