செவ்வாய், 12 நவம்பர், 2019

ரஜனியும் கமலும்

ரஜனியும் கமலும்
===========================================ருத்ரா

ஒருவர் பிறந்த தினவிழாவில்
இன்னொருவர் பேருரை.
கட்டித்தழுவிக்கொள்கிறார்கள்.
காலில் விழுகிறேன் என்கிறார்கள்.
ரசிகர்களை மோதவிட்டு
ஏன் இந்த சினிமாக்காத்தாடிக்கு
"மாஞ்சா"தடவிவிட்டுக்கொள்ளவேண்டும்?
என்பது போல்
ஒருவர் உணர்ர்ச்சி வசப்படுகிறார்.
இருவரும் நடிப்பில்
மக்களை தூண்டில் போட்டு
வைத்திருக்கிறார்கள்.
வள்ளுவர் சொன்னது போல்
சினிமா எனும்
இந்த சூதாட்ட பொன் தூண்டிலை
விழுங்கியவர்களாய்
மக்கள் 
துடிக்கிறார்கள்
துள்ளுகிறார்கள்
குத்தாட்டங்கள் போடுகிறார்கள்.
திரையிலும்
தரையிலும் 
எப்போதும் இவர்கள்
அட்டைக்கத்திக்காரர்கள் தானா?
நீதியின் 
உச்ச பட்சக்காரர்களே
ஒரு கட்டைப்பஞ்சாயத்து மாதிரி
ஆனால்
வெண்ணெய் வெட்டும் கத்தி கொண்டு
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக‌
சொல்லிவிட்டார்கள்.
தொல்லியல் சிலைகள் சொல்லுகின்றன‌
இவர்களுக்குத்தான் பூமி என்று.
அப்படியென்றால்
நம் நாட்டில் 
சிந்துவெளி தொடங்கி
தோண்டும் இடங்களில் எல்லாம்
தமிழ் எனும் திராவிடதேசத்தின்
சுவடுகள் தானே கிடக்கின்றன.
அப்படியென்றால்
இந்திய நாடு அடிப்படையில்
ஒரு தமிழ்நாடு தானே.
ஓ!வீரர்களே!
புரட்சித்திலகங்களே!
புறப்படுங்கள்
குதிரைகள் காத்திருக்கின்றன.
இந்தியாவின் மண்ணுள் புதைந்திருக்கும்
அந்த தமிழ் நாட்டை
மேலே உயர்த்துங்கள்.
ஓட்டு எந்திரங்களில் கூட‌
உங்கள்
எந்திரன் 1
எந்திரன் 2
என்ற சரித்திர சகாப்தங்களை
உருவாக்குங்கள்.
உங்கள்
இந்தியன் 1
இந்தியன் 2
என்ற வெற்றிமுகங்களை
காட்ட‌
சிலிர்த்தெழுங்கள்.
திமுக அதிமுகளிலிருந்து
கறை படியாத‌
புதிய திமுகவை கட்டி எழுப்ப‌
புறப்படுங்கள்.
யாருக்கும் இங்கு ஆட்சேபணை இல்லை.
இதற்கு 
நீங்கள் செய்யவேண்டியது
உங்கள் இடுப்புகளில் கட்டப்பட்டிருக்கும்
அந்த மாய சூத்திரக்கயிற்றை
அறுத்துவிடுங்கள்.
அப்போது தான்
இந்த பொம்மலாட்டப் பொய்மைகள்
இற்று வீழும்.
வாழ்க உங்கள் அரசியல் பணி.
வெல்க உங்கள் அரசியல் பணி.

=======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக