புதன், 13 நவம்பர், 2019

திமுக காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள்!

திமுக காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள்!
=======================================================ருத்ரா

நேற்றுவரை காவி
கண்களைக் கூசியது.
இன்று சிலர்
அதில்
அதிகாலைச்சூரியனையும்
வேறு சிலர்
விடியலின் இளஞ்சிவப்பையும்
கண்டு விட்டார்கள் போலும்!
காங்கிரஸ்காரர்கள்
அப்போதே இடிக்கும் வரை
இடிக்க வைத்து விட்டு
கிளிசரின் கண்ணீரை
கண்களில் தேக்கிக்கொண்டார்கள்.
மக்கள் ஜனநாயகம் நோக்கிய‌
அரசியலில் ஏன் இந்த வீழ்ச்சி?
உச்ச நீதி மன்றத்தின் குரலின் பின்னே தான்
நம் மிச்சக் குரல்கள் எல்லாம்
என்று
நீதிக்கு தலைவணங்கும் அரசியலா?
அப்படி நீங்கள் கீழே நோக்கி
தலை வணங்கும்போது
சிதறிக்கிடக்கும்
மானுட நேயத்தின் இடிபாடுகளும்
மதச்சார்பற்ற தன்மையின்
இடிபாட்டுச் சிதிலங்களும்
உங்கள் கண்களில் படவில்லையா?
அன்று இடித்தது
பாமர் மசூதி என்றால்
இன்று
இவர்கள் கோயில் கட்டி
இடிக்கப்போவது
ராமன்
எனும் நம்பிக்கையைத்தான்.
அன்பான இந்துக்களே!
இவை உங்கள் கைகளின்
கடப்பாரைகள் அல்ல
என்று
இந்திய  மக்கள் அறிவார்கள்!
கண்ணுக்குத்தெரியாத‌
வெறித்தனமான ஆதிக்கமே இது.
ரத்த ஆறு ஓடும் என்று உறுமும்
ஓநாய்களின் ஓலம் தான்
இனி ஒலிக்கும் தேசியகீதமா?

நோபல் பரிசுக்குழுவினர்களே
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் "அமைதிப்பரிசு"க்கு
தகுதியானவர் ஒருவர்
எங்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்.
பத்திரிகை தர்மம் மற்றும்
மக்களின் மானுட நேயத்தின்
அமைதி வேட்கையை
நியாயமாய் வெளிப்படுத்தி
மதங்களின் வன்மங்களுக்கு
அடிபணியாமல்
சிந்தனையின் சுடரேந்தியாய்
நின்ற‌
திரு.ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
எனும்
பத்திரிகையாளர் தான் அவர்!

ஜனநாயகம் என்பது
அடி முட்டாள்தனமானதா?
இந்துக்களின் ஓட்டுகள்
வடையாய்
இந்த ஓட்டாளர்கள்
எனும் அழகிய காக்கையிடம்
இருப்பதாகவும்
தேர்தலின் போது
காக்காயே! ஒரு பாட்டு பாடு
என்ற நரி வேடமிட்ட‌
திமுக களும் இடது சாரிகளும் காங்கிரசும்
கெஞ்சுவது போன்ற‌
கார்ட்டூன் அல்லவா இது!
போதும்.
ஓட்டுப்பெட்டியை
ஜனநாயகத்தின் சவப்பெட்டியாய்
ஆக்கியது போதும்.
தேர்தல் அது இது என்று
இனி கூவாதீர்கள்.
சீட்டாட்டம் போதும்.
கலைத்து விடுங்கள்.
போதுமடா சாமி!.

===========================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக