வியாழன், 28 நவம்பர், 2019

கிருஷ்ணரும் அர்ஜுனரும் ரஜினியும்...

கிருஷ்ணரும் அர்ஜுனரும்  ரஜினியும்...
====================================================ருத்ரா


மோடி அமித்ஷாக்கள் தான்
கிருஷ்ணரும் அர்ஜுனரும்
என்று
சூப்பர் ஸ்டார் சொல்லிவிட்டார்.
அது யார் எழுதிய
மகாபாரதம் என்று தெரியவில்லை.
ஆனால் இன்று
மகாராஷ்டிரம் எழுதி விட்டது
இவர்கள் தரித்திருந்தது
வெறும்
அட்டை முகமூடிகள் என்று.

கொசுவை கொல்ல
கோடரி தூக்கியவராக‌
அந்த கனமான
"ஸ்பெஷல் செக்சன் ரூல் நம்பர் 12 ஐ"
தூக்க முடியாமல் தூக்கி
பயன்படுத்தி
காலில் போட்டுக்கொண்டு
காயம் பட்டு போனார் மோடிஜி.
ஆனாலும்
தப்பியது ஜனநாயகம்
அந்த படுகொலையிலிருந்து!
வியூகம் வகுத்த அமித்ஷாவோ
அந்த வியூகத்திலேயே மாட்டிக்கொண்டு
வெளியே வர முடியாமால்
எங்கோ மறைந்து கொண்டார்.
ரஜனி அவர்களே
நீங்கள்
வாயை திறக்காமல் இருப்பதும்
அதிசயம் தான்.
வாயைத்திறந்தாலும்
அதிசயம் தான்.
மகா பாரதத்தை  இப்படி
கொச்சை படுத்தியது போல்
நாளைக்கு
எங்கள் வள்ளுவன் சிலையைப்பார்த்து
அது "வால்மீகியின் சிலை"
என்று கூறினாலும் கூறிவிடுவீர்களோ
என்று நாங்கள் அச்சப்படுகிறோம்.
"தர்பாரின்" கதை
 எப்படியிருந்தபோதும்
தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு
"பொம்மைக்கொலு"வின்
தர்பார் வந்திடுமோ
என்றொரு அச்சமும் இருக்கிறது.
ரஜனி அவர்களே
அரசியல் என்பது
மூடு மந்திரம் அல்ல.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக