வியாழன், 7 நவம்பர், 2019

தெரியவில்லை



தெரியவில்லை
=========================================ருத்ரா

இந்த மலர்க்கூட்டத்தில் தான்
அன்று
என் கனவு ஒன்றை எறிந்தேன்.
பூப்போல வந்த கனவிற்குள்
காக்காய் முட்கள்.
குத்தி குத்தி அது சிவப்பாக்கியதில்
மலரின் வண்ணமே
மறைந்து போனது.
கிடக்கட்டும் அது
மலரோடு மலராக.
திரும்பி நான் அதை
பார்க்க விரும்பவில்லை.
வாழ்க்கைப்புத்தகத்தின் 
பக்கங்களுக்கிடையே
என் பொன் நினைவின்
இந்த மயிற்பீலிக்கீற்றுகளை
செருகி வைத்திருப்பேன்.
குட்டி போடும் என்கிறார்கள்.
நினைவுகளின்
குட்டிக்கரணங்களில்
அந்த மின்னல் குஞ்சு முட்டை
என்னவாய் ஆகியிருக்கும்?
தெரியவில்லை.

================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக