ஞாயிறு, 3 நவம்பர், 2019

தமிழர்களே! தமிழர்களே!

தமிழர்களே! தமிழர்களே!
================================================ருத்ரா

சங்கம் முழங்கிய தமிழெல்லாம் நம்
சரித்திரம் என்று அறிந்திருந்திருந்தோம்.
ஏடுகள் உழுத வரியெல்லாம் நம்
எழுத்தெனும் உணவென உண்டிருந்தோம்.
ஒரு குறுந்தொகைப்பாடல் போதுமடா.
நம் நெஞ்சம் நிறைந்த விருந்தாகும்.
கலித்தொகைக் காட்சி ஓவியங்கள்
களிப்புக்கடலின் அலைவிரிக்கும்.
எட்டுத்தொகையும் எழில் காட்டி
மொட்டு விரிக்கும் தமிழ்ப் பூக்கும்.
பத்துப்பாட்டு அத்தனையும் நம்
மொத்த மக்கள் வாழ்க்கை எனும்
இதயத்துடிப்புகள் ஆகிடுமே!

இடையே எப்படி வந்ததடா? இந்த‌
வயிற்றுத்திருக்கல் மொழிக்கூச்சல்.
மறைத்து மறைத்துக் கிசு கிசுத்து
மந்திரங்கள் என்றார் தந்திரமாய்.
மனதுள் இருந்த அச்சமெனும்
மனப்பேய் வளர்த்து மதம் செய்தார்.
மனிதனைப் பிரித்து சாதிமுறை
பலப்பலவாக  பிரித்து வைத்தார்.
தன்னையே கடவுள் புத்திரனாய்
தருக்கம் செய்தார் நம்மிடையே.
மன்னன் கூட மதிமயங்கி அவர்
சொற்படி ஆடும் பொம்மையென
ஆகிப்போன கொடுமைகளைத் தான்
கண்டிட்டோம் நாம் வரலாறாய்.
தானே குருவாய்  முதல்வன் என்றான்.
அடுத்தது தான் அரசன் என்றான்.
மூன்றாவதாய் வணிகன் என்று
சூழ்ச்சிகளுமே செய்து  விட்டான்.
உழவும் தொழிலும் இங்கே அன்று
வந்தனை செய்யப்படவில்லை.
நிந்தனை செய்தார் பற்பலவாய்.
உழைக்கும் மாபெரும் கூட்டமெலாம்
பிராமணர்களுக்கு காலடிகள்.

அந்தணர் என்போர் அறவோர்
மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
என்றாரே  நம் வள்ளுவரும் .
அந்த அந்தணரோ இவரில்லை.
பிறப்பினாலே  வர்ணம் தீட்டி
கோத்திரங்கள் சொல்லி
குலங்கள் சொல்லி
சூழ்ச்சி செய்தவர்களே
இவர்கள் ஆகும்.

அரசன் தரித்திடும்
மணிமுடி உச்சியில் ..இந்த
உச்சிக்குடுமியே
உட்கார்ந்து கொண்டது.

நம் தொன்மைத் தமிழ்
எங்கோ சென்றது.
பின்னணியின் ஒரு
மந்திரக்கூச்சலே
மன்னன் வாய்வழி
வந்தது.வந்தது.

சூத்திரர் என்றும்
பஞ்சமர் என்றும்
மக்களையெல்லாம்
மந்தைகள் ஆக்கினர்.
தொடுதல் குற்றம்.
பார்த்தல் குற்றம்
மூச்சு விடுதலும்
குற்றம்.குற்றம்.
முண்டாசு கூட
குற்றம் குற்றம்.
இடுப்புத் துணியும் குற்றம்
கால் செருப்பும் குற்றம்
படிப்பும் குற்றம்
பக்தியும் குற்றம்.
கொற்றவன் எல்லாம்
இற்றவன் ஆனான்.
செத்தால் கூட‌
சுடுகாடு இல்லை.
அல்லல் பட்டு  ஆற்றாது
அழுத கண்ணீர் எல்லாம்
சமூக அநீதி அத்தனையும்
தேய்க்கும் படையாகிடும்.
தெளிவாய்  தெளிவாய்
தமிழா  நீ
திரள்வாய் திரள்வாய்
தமிழா நீ.

நான்கு வர்ணம் நானூறு ஆனது.
மேலே உள்ளவன் கீழே மிதிக்க
கீழே உள்ளவனும் தனக்குக் கீழே
உள்ளவனையும்  இன்னும் மிதிக்க
சாதி அடுக்குகளின் சரித்திரமே
பல நூற்றாண்டுகளையும் தின்று
முடித்ததையே கண்டோம் நாம்!

வெள்ளையன் வந்தான்.
அவனும் இங்கு
ஆண்டுகொள்ளவே
அறிவு சன்னல்
கொஞ்சம் திறந்தான்.
கொஞ்சம் திறந்ததில் நம்
கொத்தடிமைத்தனமே
தெளிவாய் தெரிந்தது.
வேடம் போட்ட
வேதம் தெரிந்தது.
பிரம்மம் என்னும்
புரட்டு தெரிந்தது .
மூன்று கோட்டையை
எரித்த சிவனை
கும்பிட வைத்த
பொய்மை புரிந்தது.

சிந்துவெளிக்கோட்டைகள்
தமிழன் கோட்டைகள்.
அறம்பிறழ்ந்த ஆரியக்கூட்டம்
அக்கோட்டைகளை எல்லாம்
சூழ்ச்சியால் எரித்த கதையே ..இங்கு
முப்புரம் எரித்த சிவ காண்டம்.
வெள்ளையன் திறந்த
கல்விக்கண்ணில்
வேதாந்தம் எல்லாம் வெறும்
வெங்காயம் தான்.
வேண் தாடி வேந்தன்
சொன்னது பலித்தது.
பகுத்து அறிந்தவன் ஒரு
"சுய மரியாதை "
இயக்கம் தந்தான்.
"தன்மானம்" என்று
தமிழில் சொன்னால்
அதையும் ஒரு
இலக்கணக்குறிப்பாய்
படித்துக்கொண்டே
இருப்போம் நாம்.
மழுங்கடித்தே
கிடப்போம் நாம்.
அதனால்
அவன் சொல் கொண்டே ..அவன்
ஆதிக்கம் அழிப்போம்.
அதுவே
நம் "சுயமரியாதை" இயக்கம்.

மன்னன் இடம் மாறிப்போனது
பொய்மைக் கூச்சல் குப்பைகளின்
மந்திர சுலோகங்கள் ஆளவந்தது.
சாதி மதத்தை அரசியல் ஆக்கினான்
கடவுளாவது  கத்தரிக்காயாவது
தர்ப்பையை தூர எறிந்துவிட்டு நம்
செங்கோல்  ஏந்தி நிற்கின்றான்.

கணினிக்குள்ளும் புகுந்துவிட்டான்.
எந்த "பட்டன்"  தட்டினாலும்
ஓட்டுக்களை எண்ணிப்பார்க்கும்போது
நான்கு வர்ண பேதங்கள்  தான் ..ஆ ட்சி
நாற்காலியில் அமர்ந்திடுமாம்.

சூது அறிந்திடு தமிழா நீ
தீது அறிந்திடு  தமிழா நீ
தமிழின்
சூழ் பகை அறிந்திடு நீ
தமிழா நீ .

விழித்திடு ! விழித்திடு !
தமிழா நீ!
விடியல் இனி வெகு தூரமிலை.
விழித்திடு !விழித்திடு!!
தமிழா நீ!


==============================================


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக