புதன், 6 நவம்பர், 2019

ரஜனிக்கு விருது

ரஜனிக்கு விருது
================================ருத்ரா 


என்றோ கிடைத்திருக்க வேண்டியது.
இன்று கிடைத்ததும்
நன்றே
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
விருதுக்குப் பின்னே
நீங்கள் தரும் கால்ஷீட்டுகளில்
நீங்கள் காட்டப்போவது திரைப்படம் அல்ல.
நம் வாழ்வின் அவலங்களின்
தரைப்படம் ஆகும்.தரைப்படம் ஆகும்!
விருதுக்குப்பதிலாய்
அவர்களுக்கு
உங்கள் ஆன்மீக முகமூடியே வேண்டும்.
நீங்களே
அவர்கள் விரும்பும் பேனா.
உங்களைக்கொண்டு இனி
உல்டாவாக சரித்திரங்கள் எழுதிடுவார்.
குருகுலக்காவலர் ஆகிடுவீர் இனி
கல்வியெல்லாம் இனி  உயர் குடிக்கே.
மற்றைக் கீழ்ச்சாதியெல்லாம் இனி
மாடுகள் ஆடுகள் மேய்க்கட்டும்.
பஞ்சமர் எனப்பட்டவரெல்லாம் இனி
படு குழியில் போய் விழவேண்டும்.
சூத்திரர்கள் தொட்ட ஓட்டெல்லாம்
தீட்டுப்பட்டு போவதாலே
ஓட்டுரிமை இனி அவர்க்கில்லை.
மீண்டும் கபாலியாய் காலாவாய்
சீறுங்கள் சினமும் காட்டுங்கள்
ஆட்சேபணை இல்லை எங்களுக்கு .
ஆனால் அந்த சீற்றமெல்லாம் இனி
சூத்திரர்  பஞ்சமர் நோக்கித்தான்!
ராமனைக்கும்பிடுவோர் மட்டும் தான்
இந்தியப்பிரஜை ஆகிடுவார்.
மற்றவரெல்லாம் அங்கே அந்த
அரபிக்கடலில் போய் விழுவார்.
இது தான் இங்கே இனிமேலும்
ராமராஜ்ய சினிமாவாம்!
இமயமலை பாபாவின்
பூச்சாண்டிஎல்லாம்   இனி போதும்.
சிஸ்டம் சரியில்லை என்றீர்கள்.
அந்த சிஸ்டமே உங்கள் மணி மகுடம்.
நீங்கள் பச்சைக்கன்னடர் ஆனதனால்
இந்தத் தமிழரை ஒரு கை பார்த்திடுவீர்.
நெஞ்சைக்கிழிக்கும் அனுமாராய்
காட்சி ஒன்றைக்காட்டிடுவீர்.
தாமரை அதிலே பூத்திருக்கும்
அதுவே போதும் எங்களுக்கு!
பாரதத்  தவப்புத்திரனே..,உனக்கு
பாரத ரத்னா காத்திருக்கு!

======================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக