ஞாயிறு, 24 நவம்பர், 2019

பேரின்பம்

பேரின்பம்
================================================ருத்ரா

நயாகரா அருவியின்
ஓசையாய் என் மீது
விழுந்துகொண்டே இருக்கிறாய்.
அதன் நீர்ப்புகையில்
சூரியனின் ஏழுவண்ணங்கள்
பிசைந்து பிசைந்து
உன்னைக் காட்டுகிறது.
வாழ்க்கையின் அடர்வனங்களிடையேயும்
உன் ஓசை ஊடுருவுகிறது.
வயதுகள் கரைகின்றன.
ஊனும் உணர்வும்
உருகுகின்றன‌
உறைகின்றன‌
அன்பே!
என் இதயம் துடிக்க‌
இன்னொரு இதயமாய்
என்னோடு
எல்லா திசைகளுக்கும்
பயணிக்கிறாய்.
மாய உதடுகளாய்
என்னைப் புல்லாங்குழல் ஆக்கி
உன் உயிரைப்பொழிகிறாய்.
இன்பம்
இது பேரின்பம்!

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக