திங்கள், 21 அக்டோபர், 2019

அந்தி

அந்தி

=========================ருத்ரா இ பரமசிவன்.


அந்திச்சிவப்பை

இதழ் பிரித்து காட்டுகிறாள்

வானத்து மங்கை.

புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌

காமத்துப்பாலின்

முத்தம் சொட்டுகிறது.

வருடி வருடிச்செல்லும்

கடிகார முட்களிலும்

ரோஜாவின் லாவா.

உயிர்த்துளிகளில்

ஒரு விளிம்பின் ஓவியம்

மயிர் சிலிர்த்த தூரிகையால்

இன்னும் இன்னும் 

உயிர் அமுதம் ஊட்டுகிறது.

ஒரு வடிகட்டின மடையன்

இதற்கு 

பேனாவையும் பேப்பரையும் கொண்டு

சமாதி கட்டுகிறான்

கவிதை என்று!

==============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக