திங்கள், 7 அக்டோபர், 2019

கீழடி 4

கீழடி 4
============================================ருத்ரா

"அது தமிழ் நாகரிகம் இல்லை.
பாரத நாகரிகம்...."

இப்படி அப்படி என்று
நீங்கள் எப்படி
புரட்டி போட்டாலும்
அது
நெய்தல் தமிழர்களின்
பரதவ நாகரிகமே
பாரத நாகரிகம் ஆயிருக்கலாம்.
ராமனின் கதையை எழுதுவதற்கு முன்
அந்த வேடன்
மரவ மரம் எனும் மராமரங்களிடையே தான்
எழுதத் தொடங்கினான்.
சங்கத்தமிழின் ஓலைச்சுவடிகளே
மரவ மற்றும் குரவ மரங்களை
குறிப்பிடுகின்றன.
யாழ் எனும் இசைக்கருவியிலிருந்து
பண் ஒலிப்பவர்கள்
யாழர்கள் அல்லது பாணர்கள்.
அதில் ஒரு யாழன் "வியாழன்" ஆனான்.
ழகரம் நாவில் வழுக்கியதால்
வியாசன் ஆனான்.
சொற்களில் ஆழ்ந்து அகழ்வாராய்ச்சி
செய்தாலே...
கல் வெட்டுகள் தேவையில்லை
இந்த சொல்வெட்டுகளே போதும்.
இந்த செம்படவச்சியின் மகனின்
தீட்டு பட்டது தானே
வேதங்களும் மகாபாரதமும்.
தமிழ்ப்பரதவர்களே
பாரத நாகரிகத்திற்கு
விதையூன்றிவர்கள்.
தோண்டத்தோண்ட‌
தமிழ் மண்ணின்
விதைகள்
கதைகள் பல சொல்லும்!

================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக