புதன், 30 அக்டோபர், 2019

ஒரு அஞ்சலி

ஒரு அஞ்சலி
=========================================ருத்ரா

அஞ்சலி என்று சில சொற்களில்
கண்ணீர் பிழிந்து விடுவதால்
என்ன பயன்?
படுகுழியில் விழுந்த சோகம்
அல்லவா அது.
எத்தனை முயற்சிகள்?
எல்லோரும் கூட்டமாய் திரண்டனர்.
டிவியின் சதுரக்கட்டங்களில்
நாலைந்து பேர் நாலந்து பேராய்
எத்தனை ஆவேசமாய்
சொற்களின் பரிமாற்றம்?
எல்லாம் ஏமாற்றம் தான்.
குழியில் விழுந்தது விழுந்தது தான்.
கணினிக்குழியில் விழுந்தது விழுந்தது தான்.
அது தான் முடிவு சொல்லிவிட்டார்களே.
என்னது கணினியா?
அது என்ன கணினிக்குழி?
சுஜித்துக்கும் இரங்கல் தான்.
நம் ஜனநாயகத்துக்கும் இரங்கல் தான்.
என்ன செய்வது?
என்ன அழுத்தினாலும்
அதுவே தான் வருமாம்.
பெருமையாய் கூட்டம் போட்டு
சொல்லிக்கொண்டார்கள்!
ஹேக்கர்ஸ் வெட்டிய ஆழ்துளைக்குழாய்
ஆழத்தில்
நம் ஜனநாயகம் புதைந்தே போனது.

செல்வன் சுஜித்துக்கு இது விபத்து.
நம் ஜனநாயகத்துக்கு இது விபரீதம்.
மக்கள் அறிவதே இல்லை.
ஒவ்வொரு தடவையும் அவர்கள்
வெட்டும் குழி
அவர்களுக்கே தான் என்று
அவர்கள் அறிவதே இல்லை.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக