வெள்ளி, 4 அக்டோபர், 2019

க‌ல்

க‌ல்
========================================ருத்ரா

வேகமாக நடைப்பயிற்சியில்
நடந்து வந்து கொண்டிருந்தேன்.
நடைபதையே
பச்சை ரத்னக்கம்பளம்
விரித்தாற்போல்
புல் படுக்கை அணிவகுக்க‌
மிகவும் அழகாய் இருந்தது.
அழகில் மூழ்கி
கவனம் பிசகினேன்.
கால் இடுக்கில்
ஒரு கல் இடற
தடுக்கி விழுந்தேன்.
விழுந்த இடம்
ஒரு பிள்ளையார் சிலை.
சிறிதாக புல் மண்டிப்போய்
இருந்தது.
இருந்தாலும்
பூசையின் விபூதி குங்குமம்
அதை அடையாளம் காட்டியது.
உடனே
பிள்ளையாரப்பா!
மண்டையில் அடிபடாமல்
காப்பாற்றினாய்.
தலையை குட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போட்டேன்.
அடி பட்டிருந்தால்..
என்ற "ப்ராபபளிட்டி"தான்
அங்கே கடவுள்.
அடி படாது
என்ற ப்ராபபளிட்டி
அங்கே கடவுள் இல்லை.
நமக்கேன் வம்பு?
கடவுள்
என்பதும்
கடவுள் இல்லை
என்பதுமாய்
பின்னிப்பிணைந்த‌
ப்ராபபளிட்டியைப்பற்றி
நாம் எதற்கு
ஈக்குவேஷன் எழுத வேண்டும்?
கபாலத்தில் அடி என்பது
கபால மோட்சம் எனும்
மரணத்தின் முற்றுப்புள்ளியாகி விட்டால்?...
பிள்ளையாரப்பா..காப்பாற்று..
என்று
மீண்டும்
விழுந்து கும்பிட்டுவிட்டு
கிளம்பினேன்.
சின்னக்கல் இடறிவிட்டது.
பெரிய கல் கும்பிடவைத்தது.
இயற்கையின் கல்லுக்கும் தெரியும்
எப்படி
அரசியல் பேச வேண்டும் என்று!

====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக