திங்கள், 28 அக்டோபர், 2019

பேசிக்கொள்கிறார்கள்.



பேசிக்கொள்கிறார்கள்.
============================================ருத்ரா

என்ன பிரச்னை உனக்கு?

என்னத்த சொல்றது.
திருவிழால்லாம் முடிஞ்சு போச்சு.
டல்லடிக்குது.

என்ன சொல்ற?

பின்னே என்னங்க?
அவங்க ஜெயிப்பாங்க‌
இவங்க தோப்பாங்கன்னு
அவங்க சொல்லிட்டே இருப்பாங்க.
டி ஆர் பி கூடிகிட்டே இருக்க்கும் அவங்களுக்கு.
இங்க பட்டுவாடாவும்
பட் பட்டுன்னு நடந்துகிட்டே இருக்கும்.

அதுக்கு  என்ன பண்றது?

என்ன பண்றதா?
இருக்கிற எம் எல் ஏக்களை
கொஞ்சம் கொஞ்சம் பேரா
வூட்டுக்கு அனுப்ப்பிட்டு
அந்த காலி இடங்களுக்கு
இடைத்தேர்தல்னு அறிவிச்சா போதுமே
ஊரே களை கட்டிடுமே

என்னப்பா?
ஜனநாயகம்னா கத்தரிக்காய் வாழக்காய் வியாபாரம்னு
நெனச்சியா?

அதான் சொல்லிட்டிங்களே
வியாபாரம் தான்.
ஆட்டுச்சந்தை மாட்டுச்சந்தை மாதிரி
ஓட்டுச்சந்தை இது.
மறுபடியும் யாவாரம் சூடு பிடிச்சா போதுங்க.

அதுக்கு?

வேற ஒண்ணுமில்லிங்க‌
நம்ம  ஆணையத்துட்ட சொல்லி
திருவிழா நடத்தச் சொன்னா போதுங்க.

சரிதான்.
இன்னும் ஆயிரம் ஆண்டு போனாலும்
இப்படி
நம்ம நாகரிகத்த
தோண்டிகிட்டே இருக்கவேண்டியது தான்.


(தயது செய்து சிரித்துக்கொள்ளுங்கள்.
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்ண்றாங்களே
அப்படின்னா
இந்த நோயும் இருந்துகிட்டே இருக்கும்.
நாமும் அதுக்கு சிரிச்சுகிட்டே இருப்போம்.)

==========================================================











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக