வியாழன், 30 ஜூலை, 2026

தமிழனும் அப்படித்தான்.

 



தாயுடன் இருக்கிறேன் நான்

என்று நினைத்து விழுந்தது

குஞ்சு.

பறக்கும் முன்னே இறந்து போனது.

தாயுடன் பறக்கிறேன் என்று

நினைக்கவே இல்லை.

தமிழனும் அப்படித்தான்.

பிழைப்புக்காகத்தான் பிறந்தான்.

தமிழனாக பிறந்தேன் 

என்று அவன்

இன்னும் வாழவே துவங்கவில்லையே.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக