ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

 


புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

_____________________________________________


(01.08.2026 ல் திரு வண்ணத்தாசன் அவர்கள்

முகநூலில் எழுதிய கவிதை)



மண் இடம் மாற்றிக்கொண்ட

விண்ணில்

விடிவெள்ளிகள்.

கை நிறைய மனம் நிறைய‌

அள்ளிக்கொண்டதில்

விரல் இடுக்குகளில்

குற்றாலப்பிழியல்கள்.

குளித்துவிட்டு தலை துவட்டும்

அந்த குற்றாலத்துண்டு

இழைச்சன்னல்கள் தோறும்

சூரியக்கண்களின்

ஏழுவர்ணப் பார்வைகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக