ஞாயிறு, 5 ஜூலை, 2026

கண்ணீர் மல்குவதைத்தவிர?

 வாழ்க்கையின் நுட்பம் அறிந்து தான்

வாழவேண்டுமா?

எல்லாவற்றையும் அறிந்து

உன்னை கனமாக்கி கொள்ளவா

பிறந்தாய்?

காற்றாகவே மிதக்காமல் 

இந்த கல்லைக்கட்டிக்கொண்டு

நீ 

எங்கே செல்ல முடியும்?

கை கூப்பி மண்டியிட்டு

கண்ணீர் மல்குவதைத்தவிர?

________________________________

சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக