சனி, 12 நவம்பர், 2022

"எண்ணியம்"

 

"எண்ணியம்"

__________________________________

ருத்ரா


டிஜிடல்கள் இருக்கும்போது

நெல்லுமணிகள் எதற்கு?

ஆன் லைனில்

சிலிகான் ரவைகளில்

வைட்டின்மின்களை

பூசி வைத்துக்கொண்டால் போயிற்று.

எதற்கு காளையும் பசுவும்?

எதற்கு தென்னை மரங்கள்?

டெர்மினேட்டரில் வருகின்ற‌

மண்டையோட்டு சிதலங்களில்

சர்க்யூட் சமாச்சாரங்கள்

செயற்கை எச்சில் வடித்து

செயற்கை ரத்தச்சேற்றில்

முடியப்போகும்

நம் கூகிள் வயல்களை

உழுது கொண்டிருப்போம்

வாருங்கள்


___________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக