புதன், 30 நவம்பர், 2022

நுனி

 நுனி

________________________________________

ருத்ரா



ஆகா..குரல்

வெண்கலக்குரல்.

பேசும்பொருள் 

கேட்பதற்கு முன்னரே

ஆவியாகப்போய் 

காணாமல் போய்விடும்

கவர்ச்சி நிறைந்தது.

கேட்டாலே போதும்.

கையில் கம்பு கட்டையை 

தூக்கிக்கொண்டு

அவர் குறித்த நபரை

தாக்கி கந்தலாக்கி விட்டுத்தான்

மறுவேலை

என்று மயிர்க்கால் எல்லாம்

மஞ்சள் குங்கும

மதநீர் ஒழுக வைத்துவிடும்.

சோமபானம் காய்ச்சி

வடித்துத்தந்த‌

சொற்கள் எல்லாம்

வானத்திலிருந்து வரும் 

சொற்கள் என்று

பொய்க்குமிழிகள் 

பூதாகரமாய்

இந்த மண்ணை 

கரையான் அரித்தது போல்

அழித்துவிட்டதில்

மிஞ்சி இருப்பதெல்லாம்

வெறித்தீயின் சாம்பல்கள் மட்டுமே.

மானுடமே இந்த சவப்பெட்டிக்குள் தான்.

அதற்கு இறுதி ஆணிகள்

அடிக்கும் சம்மட்டியின் கொடு நிழலே

இது.

இதன் காட்டுக்கூச்சல்களில்

நம் மரண ஒலங்களே

நமக்கு மத்தாப்பு காட்டுகின்றன.

அவை எரிந்து எரிந்து

நம் கையையே பொசுக்கும்

மரண நுனி

இதோ அருகில் அருகில்..

அதுவே இது.

2024.


_______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக